மஸ்ஜிதுல் அக்ஸா:ஜும்ஆ தொழுகையில் 3.5 லட்சம் முஸ்லிம்கள் பங்கேற்பு!

Muslims pray in Al-Aqsa on penultimate Ramadan Friday
ஜெருசலம்:இஸ்லாத்தில் மூன்று முக்கிய புனித மஸ்ஜிதுகளில் ஒன்றான மஸ்ஜிதுல் அக்ஸாவில் ரமலானின் நான்காவது வெள்ளிக்கிழமையன்று மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் ஜும்ஆ தொழுகையில் பங்கேற்றனர்.

இஸ்ரேலின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி லட்சக்கணக்கான மக்கள் பரிசுத்தமான மஸ்ஜிதில் நடந்த ஜும்ஆவில் கலந்துகொண்டனர்.
மஸ்ஜிதுல் அக்ஸாவில் ஜும்ஆ உரை நிகழ்த்திய இமாம் தனது உரையில் கூறியது: ‘ஃபலஸ்தீன் மற்றும் புனித மஸ்ஜிதான மஸ்ஜிதுல் அக்ஸாவை விடுவிப்பது உலக முஸ்லிம்களின் கடமையாகும். இவற்றின் பாதுகாப்பு என்பது உலக முஸ்லிம்களின் நம்பிக்கையில் உட்பட்டதாகும். எல்லா வேற்றுமைகளையும் மறந்து முஸ்லிம்கள் ஒன்றிணைந்து குத்ஸின் விடுதலைக்காக பாடுபட வேண்டும்’ என கூறினார்.
மஸ்ஜிதுல் அக்ஸா மற்றும் குப்பத்துஸ்ஸுஹ்ராவின் முற்றங்கள் ஆண்கள் மற்றும் பெண்களால் நிரம்பி வழிந்தன. ஜும்ஆ தொழுகைக்கு பிறகு ஃபலஸ்தீன் மற்றும் இதர நாடுகளில் உயிர் தியாகம் புரிந்த முஸ்லிம்களுக்கு ஜனாஸா தொழுகையும்(இறந்தவர்களுக்கான பிரார்த்தனை) சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றன.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!