

மக்கா: பரிசுத்த உம்ராவை ரமலான் மாதத்தில் நிறைவேற்றுவதற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகைத தந்த நம்பிக்கையாளர்களின் கூட்டத்தால் கஃபாவும், அதன் சுற்றுவட்டாரங்களும் திணறுகின்றன. சாதாரணமாக ரமலானின் இறுதி பத்து தினங்களில்தான் பெரும் மக்கள் வெள்ளம் காணப்படும். ஆனால், இவ்வாண்டு ரமலானின் முதல் பத்து தினங்களிலேயே நம்பிக்கையாளர்கள் பெருமளவில் திரண்டுவிட்டனர். தொழுகை வேளைகளில் ஒரு இஞ்ச் இடம் கூட காலி இல்லாத அளவுக்கு மஸ்ஜிதுல் ஹரமில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஃபஜ்ர் தொழுகைக்கோ தொழுகைக்கான அணிவரிசைகள் மஸ்ஜிதுல் ஹரமிற்கு வெளியேயும் தாண்டிச் சென்றுவிட்டது. தவாஃப் என்று அழைக்கப்படும் கஃபாவை வலம் வரும் வேளையிலும், ஸஃபா-மர்வா குன்றுகளிடையே ’ஸயீ’ என்ற ஓடுதலின்போதும் மக்கள் நெருக்கம் அதிகமாகக் காணப்பட்டது.
தனியாகவும், குடும்பத்தினருடனும் வந்த மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்களாவர். ஆயிரக்கணக்கான இந்தியர்களும் உம்ராவுக்காக மக்கா வருகை தந்தனர். லட்சக்கணக்கான மக்கள் மஸ்ஜிதுல் ஹரமில் இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். நோன்பு திறக்கும் வேளையில் சுப்ரா என்றழைக்கப்படும் விரிப்புகளில் பேரீத்தம் பழமும், தண்ணீரும் விநியோகிக்கப்பட்டது.
ஒரு நாள் நோன்பு திறப்பதற்கு ஒன்பது டன் புதிய பேரீத்தம்பழம் விநியோகிக்கப்பட்டது. இஃப்தார் சுப்ராக்களின் மொத்த நீளம் 13 கிலோமீட்டர் ஆகும். இதனைத் தவிர அறக்கட்டளைகள் மூலம் மஸ்ஜிதுல் ஹரமிற்கு வெளியே இஃப்தார் நிகழ்ச்சிகள் நடந்தன. ஒவ்வொரு தினமும் ௩ ஆயிரம் க்யூபிக் மீட்டர் ஸம்ஸம் தண்ணீர் குடிப்பதற்காக விநியோகிக்கப்பட்டது. 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸம்ஸம் தண்ணீர் அடங்கிய கேன்கள் உள்ளன.
தன்னார்வத் தொண்டர்களை தவிர 700 தொழிலாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் உள்பட பல்வேறு அமைப்புகள் மஸ்ஜிதுல் ஹரமில் சிறப்பு இஃப்தார் சுப்ராக்களுக்கு ஏற்பாடுச் செய்தார்கள்.
தனியாகவும், குடும்பத்தினருடனும் வந்த மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்களாவர். ஆயிரக்கணக்கான இந்தியர்களும் உம்ராவுக்காக மக்கா வருகை தந்தனர். லட்சக்கணக்கான மக்கள் மஸ்ஜிதுல் ஹரமில் இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். நோன்பு திறக்கும் வேளையில் சுப்ரா என்றழைக்கப்படும் விரிப்புகளில் பேரீத்தம் பழமும், தண்ணீரும் விநியோகிக்கப்பட்டது.
ஒரு நாள் நோன்பு திறப்பதற்கு ஒன்பது டன் புதிய பேரீத்தம்பழம் விநியோகிக்கப்பட்டது. இஃப்தார் சுப்ராக்களின் மொத்த நீளம் 13 கிலோமீட்டர் ஆகும். இதனைத் தவிர அறக்கட்டளைகள் மூலம் மஸ்ஜிதுல் ஹரமிற்கு வெளியே இஃப்தார் நிகழ்ச்சிகள் நடந்தன. ஒவ்வொரு தினமும் ௩ ஆயிரம் க்யூபிக் மீட்டர் ஸம்ஸம் தண்ணீர் குடிப்பதற்காக விநியோகிக்கப்பட்டது. 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸம்ஸம் தண்ணீர் அடங்கிய கேன்கள் உள்ளன.
தன்னார்வத் தொண்டர்களை தவிர 700 தொழிலாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் உள்பட பல்வேறு அமைப்புகள் மஸ்ஜிதுல் ஹரமில் சிறப்பு இஃப்தார் சுப்ராக்களுக்கு ஏற்பாடுச் செய்தார்கள்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!