தமிழ் நாட்டில் 27-ந்தேதி பக்ரீத் பண்டிகை: தலைமை காஜி அறிவிப்பு

 
பக்ரீத் பண்டிகை 27-ந்தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். பக்ரீத் பண்டிகை 26-ந்தேதி கொண்டாடப்படுவதாக அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிறை தாமதமானதால் பக்ரீத் பண்டிகை 27-ந்தேதி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாஹூத்தின் முகம்மது அய்யூப் அறிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

ஹிஜ்ரி 1433 துல்காயிதா மாதம் 29-ம் (செவ்வாய்க்கிழமை) அன்று மாலை துல்ஹஜ் மாத பிறை சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் காணப்படவில்லை. அதனால் 18-ந் தேதி அன்று துல்ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. எனவே ஈதுல் அத்ஹா (பக்ரீத்) பண்டிகை 27-ந்தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 comments:

அதிரை.மெய்சா said...

இப்புனிதமிகு ஹஜ்ஜிப்பெருநாளை இனிதாய் கொண்டாடிட அனைவர்களுக்கும் என் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்.(my advance congratulation)

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!