
தமிழகத்தில் பருவமழை தொடங்கி விட்டது. இந்த சமயத்தில் பெரும்பாலும் குடிநீர் மூலம் பரவும் நோய்கள்தான் அதிகம் தாக்குகிறது. அதற்கு அடுத்து, கொசு மற்றும் பூச்சிகளால் ஏற்படும் நோய். மழைநீரும், சாக்கடை நீரும் கலந்து ஓடும் இடங்களில் நடந்து செல்லும்போதும் வைரஸ் கிருமிகள் பரவி நோய்கள் ஏற்படும்.
சுகாதாரம் இல்லாத குடிநீர் மூலம் காலரா, வாந்தி, பேதி, மஞ்சள்காமாலை ஆகிய நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இது எல்லா வயதினருக்கும் வரும். மழை நீர் தேங்கிய பகுதியில் உருவாகும் கொசுக்கள் மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, மூளைக்காய்ச்சல், யானைக்கால் ஆகிய நோய்கள் வரும். மூளைக்காய்ச்சல், டெங்கு நோய் குழந்தைகளை அதிகம் பாதிக்கும்.தெருவில் ஓடும் சாக்கடை நீரால் எலி காய்ச்சல் நோய் ஏற்படும்.தமிழகத்தில் சுகாதாரத்துறை நடத்திய ஆய்வின்படி, மழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வழக்கத்தைவிட அதிகம் பேர் நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
இதுபோன்ற நோய்கள் நம்மை தாக்காமல் இருக்க எளிதான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்தாலே மழைக்கால நோய்கள் வராமல் தடுக்கலாம்.
சில கிருமிகள் மருந்துகளுக்கு கட்டுப்படாதவைகளாக உள்ளது. அதனால் தலைவலி, காய்ச்சல், சளி, இருமல் ஏற்பட்டால் உடனே டாக்டரிடம் செல்ல வேண்டும். காய்ச்சல், சளி, இருமல் இரண்டு, மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் ஆரம்ப கட்டத்திலேயே ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்து என்ன கிருமி தாக்கியுள்ளது என்பதை உடனே தெரிந்து கொண்டு, அதற்கு தகுந்தபடி சிகிச்சை அளிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு மழை காலத்தில் கதகதப்பான ஆடைகளையே அணிவிக்க வேண்டும். மழை காலத்தில் குடிக்கும் தண்ணீரை, காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும். கூடுமானவரை பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு வீட்டில் காய்ச்சிய தண்ணீரையே எடுத்து சென்று குடித்தால் மழை கால நோயில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்கின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள்.
கை கழுவி விட்டு சாப்பிட வேண்டும்...
கை கழுவி விட்டு சாப்பிட வேண்டும்...
மழை காலத்தின்போது சுகாதார முறையில் கட்டப்பட்ட கழிவறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வீட்டு வாசல், தெருக்கள், நடைபாதைகளில் குழந்தைகளை மலம் கழிக்க வைக்கக்கூடாது. பெரியவர்களும் கண்ட கண்ட இடங்களில் சிறுநீர், மலம் கழிக்கக்கூடாது. மழை நீருடன் மலம், சிறுநீர் ஆகியவை கலந்து நோய் கிருமிகளை ஏற்படுத்தும் அபாயம் அதிகம் உள்ளது.
வீட்டை சுற்றி கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்து கொள்ள வேண்டும். வெளியே சென்று வீடு திரும்பியதும் கை, கால்களை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும். செருப்பு, ஷூ ஆகியவற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். உணவு சாப்பிடும் முன்பு கட்டாயம் கைகழுவி விட்டு சாப்பிடவும். குழந்தைகள் கை கழுவுகிறார்களா என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!