சூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 8

மத்திய அரசு “Ministry of Renewable Energy – (MNRE)” அமைச்சகத்தின் மூலம் சூரிய ஒளியை சக்திக்கு பயன்படுத்த பொது மக்களை ஊக்குவிக்கும் வகையில் மானியம் வழங்கி வருகிறது. நேரடியாக இத்திட்டத்தை எல்லா மாநிலங்களிலும் National Bank for Agricultural and Rural Development – NABARD”மூலமாகவும், மாநில அரசுகளின் மின்சக்தி மேம்பாட்டு ஏஜன்ஸிகளின் மூலமாகவும் செயல்படுத்துகிறது. அது பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.நிதி உதவி தேவைப்படுபவர்கள் நபார்டு வங்கியை தொடர்பு கொண்டு விபரங்களை பெற்று கடனுக்கு விண்ணப்பிக்கலாம். மானிய தொகை நீக்கி மீதியுள்ள தொகையில் குறிப்பிட்ட சதவிகிதம் கடனாக வழங்கப்படும்.  MNRE-யால் அங்கீகாரம் வழங்கப்பட்ட சப்ளையர்களிடமிருந்தே வாங்கவேண்டும். அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளையும் கடன் வழங்குமாறு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. அவர்களையும் தொடர்பு கொள்ளலாம்.MNRE-யால் அங்கீகரிக்கப்பட்ட மாடல்கள், அவற்றின் விலை, அதற்கு கிடைக்கும் மானியம் இவற்றை விளக்கும் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.



மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாடல்களுக்கு அதில் உபயோகப்படுத்தப்படும் பி.வி. மாடுல்ஸ்(சோலார் பேனல்) வாட்ஸ்சின் அளவை பொருத்து ஒரு வாட்-க்கு ரூ. 108 /- என்ற அளவில் மானியம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

வங்கி கடன் தேவை இல்லை என்றால் நாம் நேரடியாக அங்கீகாரம் பெற்ற சப்ளையர்கள் அல்லது உற்பத்தியாளர்களை அணுகினால் அவர்களே மானிய தொகைக்கு ஏற்பாடு செய்வார்கள். வாங்கப்படும் சிஸ்டத்திற்கு MNRE பொறுப்புகிடையாது. எனவே அவர்களுடைய பட்டியலில் உள்ள நல்ல டீலரை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் நமக்கு உண்டு. உத்திரவாதம், சர்வீஸ் ஆகியவற்றை செய்து தருபவராக இருக்கவேண்டும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள சோலார் சிஸ்டம் மிக குறைந்த வாட்ஸ் கொண்டது என்பதால், கிராமப்பகுதி மக்களுக்கே பயன்படும் என நினைக்கிறேன்.

அடுத்த பதிவில் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற உற்பத்தியாளர்கள், அவர்களின் விற்பனை பிரதிநிதிகளின் விபரங்களை தருகிறேன். 370 பக்கங்கள் கொண்ட பி.டி.எஃப் பைலாக என்னிடம் இருக்கிறது. அதில் தமிழ் நாட்டில் உள்ள டீலர்களின் விபரத்தை தனியாக பிரிக்க வேண்டும். மொத்தமாக உங்களுக்கு தரலாம் என்றால் அதை எப்படி அப்லோடு செய்து லிங்க்-ஐ பெறுவது என தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.


2 comments:

ஹபீப் HB said...

பதிவுக்கு நன்றி.அருமையான ஆக்கம்.வாழ்த்துக்கள்.

அப்துல் ஜலீல்.M said...

பதிவுக்கு நன்றி.அருமையான ஆக்கம்.வாழ்த்துக்கள்.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!