இதய நோய்களுக்கு இனி ஆபரேசன் தேவை இல்லை : புதிய சிகிச்சை வருகிறது!



வால்வுகள் அடைப்பு, சீரில்லாத இருதய துடிப்புகள், இருதயத்தில் ஓட்டைகள் உள்ளிட்ட பல இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் அறுவை சிகிச்சை (ஆபரேசன்) மூலம் குணமாக்கப்பட்டது.

மார்பு எலும்புகளை திறந்து அதன் பின்னர் ஒபன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டது. இதனால் கடுமையான வலி மற்றும் அறுவை சிகிச்சையின் போது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. ஆனால் இது போன்ற அறுவை சிகிச்சைகள் இன்றி புதிய மருத்துவ முறை தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இருதய நோயாளியின் கால் அல்லது தோள் பட்டையில் உள்ள ரத்த நாளங்களில் சிறு துளையிட்டு அதன் வழியாக குழாய்களை செலுத்தி அதன் மூலம் வால்வுகள் அடைப்பு, இருதய ஓட்டையை சரி செய்தல், சீரில்லாமல் இயங்கும் இருதய துடிப்பு போன்ற வற்றை சரி செய்ய முடியும்.

தற்போது இது நடைமுறையில் இருப்பதாகஅட்லாண்டாவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியின் டாக்டர் ஸ்பென்சர் கிங் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு இவர் அமெரிக்கன் கல்லூரி இருதய பிரிவின் தலைவராக இருந்தார்.

இந்த சிகிச்சையை 90 வயது முதியவருக்கும் செய்ய முடியும். அறுவை சிகிச்சை மூலம் உடலில் பெரிய அளவில் காயம் படாததால் ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம். இருதய ஆபரேசனுக்கு அதிக அளவில் செலவு ஏற்படாது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!