வரதட்சணை !


வர தட்சணையெனும் நோய் பரவி
தரணியெங்கும் மரண ஓலம்
பிச்சையிலும் கேடுகெட்ட
பிணம் தின்னிக் கழுகுகளாய்
பிடிங்கித் தின்னும் கூட்டம் ஒன்று
பதுங்கிக் கிடக்குது பாரிலின்று

பகல் கனவாய் ஆனது வாழ்வு
பாவி பெற்ற பைங்கிளி மகளே
நகலெடுத்த புகைப்படமாய்
நிறம் மாறிப் போனாயே
நிம்மதியைத் தொலைத்தாயே

வரதட்சணைக்கொடிய நோயாம்
வறியோரின் உயிரைக்குடிக்கும்
நச்சு விஷச்செடியாம்
நாடெங்கும் பரவியதே
நலிந்தோரை வாட்டியதே

கன்னியரை சந்தைப் பொருளாய்
காணுகின்ற மானிடர் கூட்டம்
முதிர்க் கன்னித் தனி ரகமாய்
முகமறியா அரக்கனிடம்
சிறை பட்டுப் போயினரே
சிதைபட்ட வாழ்க்கையாகி

இளம் கன்னி மணமுடிக்க
இயன்றவரை தட்சித்து
இல்வாழ்வில் இணைந்த பின்னே
பொல்வாழ்வாய் ஆனதுவே
பொல்லாதவனின் கையில் சிக்கி

விண்ணுக்கும் உன் பெயரிடுவான்
வியந்து உலகம் பார்க்க வேண்டி
கண்ணுக்குள் வைத்திருப்பான்
கழுத்தில் மின்னும் தங்கம் நாடி

பெண்ணுக்குப் புகழுரையாம்
பேரு பெற்ற தலைவர் அரங்கில்
மண்ணுக்கும் பெண் அடிமை
மனிதன் வகுத்த கோட்பாட்டில்
அதிரை மெய்சா

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 17-10-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

4 comments:

ஹபீப் HB said...

வரதட்சணைக்கொடிய நோயாம்
வறியோரின் உயிரைக்குடிக்கும்
நச்சு விஷச்செடியாம்
நாடெங்கும் பரவியதே
நலிந்தோரை வாட்டியதே.

வரதட்சணை ஒரு கொடிய நோய் தான் வரிகள் அருமை வாழ்த்துக்கள்.

அப்துல் ஜலீல்.M said...

அருமையான வரதட்சணை ஒரு கொடிய நோய் கவிதை

கோ.மு.அ. ஜமால் முஹம்மது. said...

பதிவுக்கு நன்றி.

அடடே! வரதட்சணையா?
யூரிக் ஆசிட் நோய்க்கு நிரந்தர தீர்வு மருந்தே இல்லையாம், இந்த வரதட்சனையும் ஒருவகையில் யூரிக் ஆசிட் நோய்தான்.

மணமகன் மணமகள் இருக்கும்வரை வரதட்சனையும் இருந்துகொண்டுதான் இருக்கும். அப்போ என்ன செய்வது, ஒருசமயம் திருமணமே நடக்காமல் நின்று விட்டால்? அடப் பாவமே, போனா போய்விட்டு போகுதே.

இப்படிக்கு.

K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

Unknown said...

வரதட்சணை ஒரு கொடிய நோய் தான் வரிகள் அருமை வாழ்த்துக்கள்.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!