காலியார் தெருவில் ரூ.4.30 லட்சம் செலவில் புதிதாக 'பேவர் பிளாக்' சாலை அமைக்கும் பணி!!


தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி 14 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் தார்சாலை மற்றும் சிமெண்ட் சாலைக்குப் பதிலாக நவீன முறையில், 'பேவர் பிளாக்' எனும், சிமென்ட் காங்கிரிட் கல்லில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.


அதிராம்பட்டினம் பேரூராட்சி பொதுநிதி ரூ. 4.30 லட்சம் மதிப்பீட்டில், 14 வது வார்டு காலியார் தெரு - வெற்றிலைக்காரத்தெருவை இணைக்கும் சந்து பகுதியில், தற்போது பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. பணிகளை, அதிராம்பட்டினம் பேரூராட்சி 14 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் முகமது சரீப் இன்று சனிக்கிழமை மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் தொடர்ச்சியாக, காலியார் தெருவில் உள்ள குறுகலான 4 சந்து பகுதிகளில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!