
டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஹமீத் அன்சாரி வெற்றி பெற்று 2-வது முறையாக துணை ஜனாதிபதியாகியுள்ளார். அவருக்கு 490 ஓட்டுக்கள் கிடைத்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் ஜஸ்வந்த் சிங்குக்கு 238 வாக்குகளே கிடைத்தன.
தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் 10ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் புதிய துணை ஜனாதிபதியைத் தேர்வு செய்ய இன்று தேர்தல் நடந்தது. இதில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மூத்த பாஜக தலைவர் ஜஸ்வந்த் சிங்கும் போட்டியிட்டனர்.
துணை ஜனாதிபதி தேர்தல் இன்று காலை 10 மணிக்கு துவங்கியது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறை எண் 63ல் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் இரு அவை உறுப்பினர்களும் வாக்களித்தனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், சுஷில் குமார் ஷிண்டே, சரத் பவார் உள்ளிட்ட பலர் வாக்களித்தனர்.
தேர்தலையொட்டி பல மாநில எம்.பி.க்கள் டெல்லிக்கு வந்து வாக்களித்தனர். வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் முடிந்தது. இதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மொத்தம் பதிவான 736 வாக்குகளில் ஹமீத் அன்சாரிக்கு 490 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜஸ்வந்த்சிங்குக்கு 238 வாக்குகளே கிடைத்தன.
2வது முறையாக பதவிக்கு வரும் 2வது துணை குடியரசுத் தலைவர்
இந்திய வரலாற்றில் 1952- ஆம் ஆண்டு முதல் 1962 வரை டாக்டர் ராதாகிருஷ்ணன் 2-முறை துணை ஜனாதிபதியாக இருந்தார். அவரைத் தொடர்ந்து ஹமீத் அன்சாரிதான் 2-வது முறையாக துணை ஜனாதிபதியாகி உள்ளார்
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!