ரம்ஜான் பண்டிகை: பி.எஸ்.என்.எல்.-ன் 786 ஆஃபர்!



சென்னை: ரம்ஜான் பண்டிகையையொட்டி பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு(ப்ரீபெய்டு பிளான்) ரூ.786க்கு சிறப்பு சலுகை அறிவித்துள்ளது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி ரூ.786க்கு ரீசார்ஜ் செய்யும் பிரீபெய்டு செல்போன் வாடிக்கையாளர்கள் 1,572 நிமிடங்களுக்கு கட்டணமின்றி பேசலாம். இதில் 786 நிமிடங்கள் பி.எஸ்.என்.எல். உள்ளூர், எஸ்.டி.டி. எண்களுக்கும், மீதமுள்ள 786 நிமிடங்கள் தனியார் நிறுவன உள்ளூர், எஸ்.டி.டி. எண்களுக்கும் பேசலாம்.
மேலும் 786 எஸ்.எம்.எஸ். அனுப்பலாம், 786 எம்.பி.க்கு தகவல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த சலுகை 2ஜி, 3ஜி சேவை ஆகிய இரண்டுக்கும் பொருந்தும்.
ரீசார்ஜ் செய்து 90 நாட்கள் வரை இந்த சலுகையை பயன்படுத்தலாம். இந்த மாதம் 21ம் தேதி வரை இந்த சிறப்பு சலுகை அமலில் இருக்கும்.
இது தவிர ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் ஈ-ரீசார்ஜ் மற்றும் கார்டு மூலம் ரூ.110, ரூ.220, ரூ.440 மற்றும் ரூ.550க்கு ரீசார்ஜ் செய்தால் முழு தொகைக்கு பேசலாம். இந்த சலுகை வரும் 30 வரை மட்டுமே அமலில் இருக்கும்

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!