அஸ்ஸாமில் மீண்டும் கலவரம் பலியானவர் எண்ணிக்கை 64 ஆக உயர்வு

அஸ்ஸாமில் மீண்டும் கலவரம் பலியானவர் எண்ணிக்கை 64 ஆக உயர்வு

பதிவு செய்த நாள் - August 7, 2012 1:17 pm
அஸ்ஸாமில் கோக்ராஜ்ஹர் மாவட்டத்தில் மீண்டும் ஏற்பட்டுள்ள வன்முறைக்கு 3 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அங்கு பலி எண்ணிக்கை 64ஆக அதிகரித்துள்ளது. மேலும் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
துப்ரி – கோக்ராஜ்ஹர் மாவட்ட எல்லையில் உள்ள ராணிபுலி என்ற கிராமத்தில் மீண்டும் வன்முறை தலைதூக்கியுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். வன்முறை சம்பவங்களையடுத்து துப்ரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோக்ராஜ்ஹர் மாவட்டத்தில் காலவரம்பற்ற ஊரடங்கு உத்தரவு தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கோக்ராஜ்ஹர், சிரங், துப்ரி மாவட்டங்களில் பதட்டம் நீடிப்பதால், மூன்று மாவட்டங்களிலும் இன்று காலை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
அஸ்ஸாமில் போடோ பழங்குயினத்தவருக்கும், சிறுபான்மையினத்தவருக்கும் கடந்த மாதம் மோதல் ஏற்பட்டது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!