புதிய தணிக்கை அமைப்பு உருவாக்கம் : முதலமைச்சர் உத்தரவு

புதிய தணிக்கை அமைப்பு உருவாக்கம் : முதலமைச்சர் உத்தரவு

பதிவு செய்த நாள் - August 7, 2012 11:35 am
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப்பபணிகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கம் என்ற புதிய அமைப்பை உருவாக்கி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊராட்சியிலும் நடைபெறும் பணிகள், பணியாற்றுவோருக்கு வழங்கப்படும் ஊதியம் ஆகியவற்றை இந்த சங்கம், தணிக்கை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தணிக்கை சங்கத்தில் பணிபுரிய இயக்குனர், தணிக்கை நிபுணர், மாநிலக் குழுக் கண்காணிப்பாளர், வட்டார வள அலுவலர் என மொத்தம் 858 பணியிடங்களை உருவாக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ஊராட்சிகளில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றும் கல்வியறிவு பெற்ற தலா 5 பேர் வீதம், 62ஆயிரத்து 620 பேரை ஆண்டுக்கு 5 நாட்கள் தணிக்கைப் பணியில் ஈடுபடுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதவிர கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு மாதாந்திர நிரந்தரப் பயணப்படியாக 300 ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதேபோன்று கிராமங்களில் மேல்நிலைத் தொட்டி இயக்குபவருக்கு சிறப்புப் படியாக மாதம் 200 ரூபாய் வழங்கப்படும் என்றும் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!