ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை – அரைறுதியில் மேரி கோம்!


Olympics Boxing- Mary Kom enters Semi-Finals
லண்டன்:ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் துனிஷிய வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார் மேரி கோம்!

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனை மேரி கோம் இந்திய ரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்றியுள்ளார்.
நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் துனிஷிய வீராங்கனை மார்வோ ரஹாலியுடன் மோதினார். இவரை இந்திய வீராங்கனை மேரிகோ 2-1, 3-2, 6-1, 4-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்.
இந்த வெற்றியை அடுத்து மேரி கோம் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதை அடுத்து இந்தியாவிற்கு ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.
இந்திய குத்துச்சண்டை வீராங்கனை ஒலிம்பிக் போட்டி தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவது இதுவே முதல் முறை. இந்த சாதனையும் மேரி கோம் நிறைவேற்றியுள்ளார்.
இதுவரை 45 கிலோ பிரிவில் மட்டுமே பங்கேற்ற மேரி கோம், அரை கிலோ அதிகரித்ததால் ஒலிம்பிக் கமிட்டி உத்தரவை அடுத்து, இந்த ஒலிம்பிக்கில் 51 கிலோ பிரிவில் இடம்பெற்று விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!