டெல்லி: ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இன்று அதிகாலையில் டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல ஹைதராபாத் சென்ற அவருக்கு அங்கும் சிறப்பான வரவேற்பு அஏளிக்கப்பட்டது.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான பாட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் சாய்னா நேவால் பங்கேற்றார். இதில் சிறப்பாக ஆடிய சாய்னா வெண்கல பதக்கத்திற்கான போட்டியில், சீன வீராங்கனை ஜின் வாங் உடன் மோதினார். இதில் காயமடைந்த சீன வீராங்கனை போட்டியில் இருந்து விலகினார். இதனால் இந்தியாவின் சாய்னா நேவால் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்த நிலையில் இந்திய பாட்மிண்டன் அணி இன்று அதிகாலையில் பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கியது. விமானத்திலிருந்து இறங்கி வெளியே வந்த சாய்னாவுக்கு நூற்றுக்கணக்கனோர் திரண்டு வந்து வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
விமான நிலையத்தில் கூடியிருந்த ரசிகர்களை கண்டு புன்னகை நிறைந்த முகத்துடன் கை அசைத்தார் சாய்னா நேவால். அவருடன் பயிற்சியாளர் கோபிசந்த், தந்தை ஹர்வீர் சிங் ஆகியோரும் வந்தார். சாய்னா நேவாலுக்கு வாழ்த்து தெரிவிக்க அதிகளவிலான ரசிகர்கள் கூட்டம் காத்திருந்ததால், கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. டெல்லி விமான நிலையத்தில் இருந்து மற்றொரு விமானம் மூலம் சாய்னா நேவால் தனது சொந்த ஊரான ஹைதராபாத்திற்கு புறப்பட்டு சென்றார்.
ஹைதராபாத் சென்ற சாய்னாவுக்கு அங்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்ற தனிப்பட்ட போட்டிகளில் கடந்த 1952ம் ஆண்டு மல்யுத்த வீரர் கஷாபா ஜாதவ் வெண்கலப்பதக்கம் வென்றார். அந்த வரிசையில் சாய்னா நேவால்10வது ஒலிம்பிக் பதக்கத்தை வென்றுள்ளார்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!