5 Aug 2012

டெஹ்ரான்:இம்மாதம் மத்தியில் சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரத்தில் நடைபெறவிருக்கும் இஸ்லாமிய உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு ஈரான் அதிபர் அஹ்மத் நஜாதிற்கு சவூதி அரேபியா அழைப்பு
விடுத்துள்ளது. டெஹ்ரானில் சவூதி தூதர், நஜாதை உச்சி மாநாட்டில் பங்கேற்க கடிதம் அனுப்பியுள்ளார்.
இம்மாதம் சவூதி அரேபியாவின் ஆட்சியாளர் மன்னர் அப்துல்லாஹ் ஏற்பாடுச் செய்துள்ள இஸ்லாமிய உச்சி மாநாட்டில், முஸ்லிம் உலகின் பிரச்சனைகளும், அரபுலகில் நடக்கும் சம்பவங்களும் விவாதிக்கப்படும். இது ஒரு அசாதாரணமான மாநாடு என சவூதி அரேபியாவின் ப்ரஸ் ஏஜன்சி கூறுகிறது.
முஸ்லிம் உலகம் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வேளையில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டே இம்மாநாடு என சவூதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சவூத் அல் ஃபைஸல் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!