ஏப்ரல் 1-ந்தேதி முதல் சமையல் கியாஸ் சிலிண்டர் எண்ணிக்கை 9 ஆக உயர்கிறது!

 
எண்ணை நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதை தடுப்பதற்காக மானிய விலையில் வழங்கக்கூடிய சமையல் கியாஸ் சிலிண்டர் எண்ணிக்கையை மத்திய அரசு குறைத்தது. வருடத்துக்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்று அறிவித்தது. அதற்கு மேல் தேவைப்படுவோர் மானியம் அல்லாத (கூடுதல் விலை) விலை கொடுத்து பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மத்திய அரசு, 6 சிலிண்டருக்கு பதிலாக 9 சிலிண்டர் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்தது. ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்க கூடாது என்பதற்காக சிலிண்டர் எண்ணிக்கையை மீண்டும் உயர்த்த முடிவு செய்தது.

இந்த புதிய நடைமுறை ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. ஏப்ரல் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை 9 சிலிண்டர்களை மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம். எனவே இனி கூடுதல் விலை கெடுத்து சிலிண்டர் பெற தேவையில்லை.

12 மாதத்திற்கு 9 சிலிண்டர்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதற்கு மேல் தேவைப்படுவோர் அதிக விலை கொடுத்து பெற வேண்டும்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!