பிளஸ்-2 தேர்வு முடிவடையும் நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது...



 
பிளஸ்-2 தேர்வு கடந்த 1-ந் தேதி தொடங்கியது. 8 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வில் கலந்துகொண்டுள்ளனர். தேர்வு நாளை (புதன்கிழமை) முடிவடைகிறது. இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் மாதம் 12-ந் தேதி வரை நடைபெறுகிறது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3012 மையங்களில் 10 லட்சத்து 68 ஆயிரத்து 838 பேர் எழுதுகிறார்கள். இவர்களில் 5 லட்சத்து 43 ஆயிரத்து 152 பேர் மாணவர்கள். 5 லட்சத்து 25 ஆயிரத்து 686 பேர் மாணவிகள்.

இவர்கள் அனைவரும் பள்ளிகளில் படித்து தேர்வு எழுதுபவர்கள். இவர்கள் தவிர 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனித்தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு தினமும் காலை 10 மணி முதல் மதியம் 12.45 மணி வரை நடைபெறும்.

காலை 10 மணிக்கு வினாத்தாள் கொடுக்கப்படும். வினாத்தாளை படிக்க 10 நிமிடம் வழங்கப்படும். அதன்பிறகு விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்ய 5 நிமிடம் கொடுக்கப்படும். தேர்வு மையங்களில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கவும், முறைகேடுகளை தடுத்திடவும் தலைமை ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

மேலும், வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் தனியாக சிறப்பு பறக்கும் படைகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. பறக்கும் படையினர் தேர்வு மையங்களுக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபடுவார்கள். வினாத்தாள் கட்டுகள் மாவட்டங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டு மாவட்ட கல்வி அதிகாரிகளின் பராமரிப்பில் உள்ளன.

வினாத்தாள் கட்டுகள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்தார்.

தேர்வு அட்டவணை.

மார்ச் 27-ந் தேதி - மொழித்தாள்-1,
மார்ச் 28-ந் தேதி - மொழித்தாள்-2,
மார்ச் 29, 30, 31-ந் தேதி - விடுமுறை,
ஏப்ரல் 1-ந் தேதி - ஆங்கிலம் முதல் தாள்,
ஏப்ரல் 2-ந் தேதி - ஆங்கிலம் 2-ம் தாள்,
ஏப்ரல் 3, 4 தேதிகள் - தேர்வு இல்லை
ஏப்ரல் 5-ந் தேதி அறிவியல் - கணிதம்,
ஏப்ரல் 6, 7-ந் தேதிகள் - விடுமுறை,
ஏப்ரல் 8-ந் தேதி - அறிவியல்,
ஏப்ரல் 9, 10, 11-ந் தேதிகள் - தேர்வு இல்லை,
ஏப்ரல் 12-ந் தேதி - சமூக அறிவியல்  

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!