பசுமை வளமும், இயற்கை வளமும் நமக்கு அரிதாய் கிடைத்த பொக்கிசங்கள்.
இத்துனை முக்கியத்துவம் வாய்ந்த பசுமையையும், இயற்கையையும் மனிதன் ஏதாவது ஒரு சுய தேவைகளுக்காக அழித்துக்கொண்டே தான் இருக்கின்றான். அதன் தாக்கத்தை இன்று நாம் கொஞ்சம் கொஞ்சமாக உணர்கிறோம், காணமுடிகிறது. [ பருவமழை பொய்த்து போதல்,அனல்காற்று, புழுதிமண், நிலத்தடி நீர் இன்மை,வைரஸ் கிருமிகள் பரவுதல்,ஓசனில் ஓட்டை,தட்பவெட்ப சூழ்நிலை மாற்றம்,] இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம். பசுமையை, இயற்கையை அழித்தல் நாம் நம்மையே அழித்துக்கொள்வதற்கு சமமே.
ஒரு பசுமையை, இயற்கையை அழித்து விட்டு நாம் ஒன்பதாயிரம் இன்னல்களுக்கு நடுவில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.
பசுமையையும், இயற்கையையும் அழித்ததால் நாம் இழந்தவைகளை கணக்கிட்டுச்சொல்ல முடியாது. அதில் சில நம்மால் மறக்க முடியாதவை
நம்மால் அழிந்த கொண்டு இருப்பவை...!!!
நம்மால் அழிந்த கொண்டு இருப்பவை...!!!
இதோ சில நினைவூட்டல்...
பச்சைப்பசேலென படர்ந்து கிடந்த வயல்வெளிகள் எங்கே..? பாதையாய் நாம் நடந்து சென்ற வாய்க்கால் வரப்புக்கள் எங்கே...?
பச்சிளம் நிறமாய் பளிச்சிட்ட புல்வெளிகள் எங்கே..? நித்தம் பூக்கும் பூமரங்கள் எங்கே...?
வாய் ருசிக்க சாப்பிட்ட கோவைப்பழங்கள் எங்கே..? வாய் வறண்டும் சாப்பிட்ட கோணப்புளியங் காய்கள் எங்கே...?
நாக்கு சிவக்க சாப்பிட்ட நாவப்பழங்கள் எங்கே...? நாக்கு அரிக்க சாப்பிட்ட முந்திரிப்பழங்கள் எங்கே...?
அடர்த்தியாய் எழுந்து நின்ற அலிஞ்சிமரங்கள் எங்கே...? நாம் அள்ளிக்கில்லி விளையாண்ட ஆமனக்குச்செடிகள் எங்கே...?
கும்பல் கும்பலாக நின்ற கருவன்காடுகள் எங்கே..? கருவண்டுகள் குடியிருக்கும் காட்டுக் கருவைகள் எங்கே...?
வீட்டு வேலியை பாதுகாத்த முல்லுமுருங்கைகள் எங்கே..? ஆடு, மாடுகள் ருசித்துச்சாப்பிடும் அந்தக் கிலுவை இலைகள் எங்கே...?
தொட்டதும் மூடிக்கொள்ளும் தொட்டாசிணுங்கிகள் எங்கே..? தோல் சிவக்க அரிக்கும் செந்தூண்டி இலைகள் எங்கே...?
கூட்டம் கூட்டமாய் பறந்து சென்ற பறவைக்கூட்டங்கள் எங்கே....?கும்மாளம் அடித்துச்சென்ற பூநாரைகள் எங்கே...?
வெட்டிச்சென்று தாவி ஓடிய வெட்டுக் கிளிகள் எங்கே..?
விடிகாலைப்பொழுதில் உதயமாகும் ஈசைப் படைகள் எங்கே...?
ஓடிமறைந்து உற்று நோக்கும் ஓணான்கள் எங்கே..? ஒய்யாரமாய் பழம் ருசிக்கும் அழகிய அணில்கள் எங்கே..?
வண்ண வண்ண நிறத்தில் வட்ட மடித்த வண்ணத்துப்பூச்சிகள் எங்கே...?
வான் சரிந்த இருட்டினில் வெட்டி மின்னிய மின்னட்டாம் பூச்சிகள் எங்கே...?
தாவிப்பிடித்து தன் தம்பிக்கு கொடுத்த தட்டான்கள்(தும்பி) எங்கே..? தங்க நிறத்தில் தன வீட்டில் தஞ்சமடையும் பொன்வண்டுகள் எங்கே.?
தூரத்து மரத்தில் கூடுகட்டி வாழ்ந்த தூக்கணாங்குருவி எங்கே..? துள்ளிவந்து தோளில் அமரும் மைனாக்கள் எங்கே...?
நம்வீட்டில் மழலைப்பேச்சு பேசிய பச்சைக்கிளிகள் எங்கே..? நாம் ரசித்துப்பார்த்த மரம் கொத்திப்பறவைகள் எங்கே...?
சப்த ஒலி மட்டும் கேட்டு ரசித்த சாரீர வண்டுகள் எங்கே....? இன்னபல நம் கண்ணில்படா இயற்கை பிறவிகள் எங்கே...?
இவை அனைத்தும் இப்போது எங்கே...?
எப்படி என்றால்.. இலங்கைப்போரின் அகதிகள் போல இல்லறங்களைப் பறிகொடுத்துவிட்டு.....திட்டுத்திட்டாய் திரிந்து கொண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாய் தன் வம்சங்கள் அழியும் நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன...!?!?!?!
தீர்வு ?
மீண்டும் பசுமையை ஏற்படுத்துவோம்
இயற்கையை காப்போம்...!
இழந்ததை மீட்போம்...!
இன்பமாய் வாழ்வோம்...!
அதிரை மெய்சா
1 comments:
விழிப்புணர்வு பதிவு !
மனிதராக பிறந்த நமக்கு சில அடிப்படைக் கடமைகள் உள்ளன. உடலை ஆரோக்கியமாக வைத்தல், உள்ளத்தை தெளிவாக உற்சாகமாக வைத்தல், தொழிலை நியாய-தர்ம அடிப்படையில் சமுதாயத்திற்கு பாதிப்பில்லாமல் செய்தல், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகள்- இவ்வாறாக பல்வேறு கடமைகளை நாம் சரியாக செய்ய வேண்டியுள்ளது.
மேற்கண்டவை போக, தம்மை உருவாக்கிய இந்த சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய சில கடமைகள் உள்ளன. பொதுவாக சான்றோர்கள் தாங்கள் வாழுகிற காலத்தில் வருங்கால மக்கள் நலமாக இருக்க பல வகையில் சிந்திக்கிறார்கள். செயல்படுகிறார்கள். அவர்கள் சமுதாயத்தின் மேல் அக்கறையும் அன்பும் கொண்டு தங்களுக்கு என்ன கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் கவலைப்படாது நல்லது பல செய்கின்றனர். அவ்வாறு தொலைநோக்குப் பார்வையுடன் எத்தனையோ பெரியவர்கள் செய்த செயல்களின் விளைவை நாம் அனுபவிக்கிறோம்.
அந்த வகையில் மரக்கன்றுகளை நட்டு அவற்றிற்கு தண்ணீர் ஏற்பாடு செய்து மரங்களாக உருவாக்குவது என்பது நம்முடைய முக்கிய கடமையாகும்.
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!