தங்கப்பதக்கம் வென்ற அதிரை இளைஞர் : ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம்!



சென்னை ஹிந்துஸ்தான் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று (07/10/2017) நடைபெற்றது.

இதில் அதிரை இளைஞர் சாலிஹ் அர்சாத் தனது முதுகலைப் படிப்புக்கான (M.Tech) பட்டம் பெற்றார். அதுமட்டுமின்றி அனைத்து பாடங்களிலும் முன்னிலை பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
சாலிஹ் அர்சாத் பற்றிய சிறு குறிப்பு:
சாலிஹ் அர்சாத் 2011ம் ஆண்டு தனது பள்ளிப்படிப்பை இமாம் ஷாபி (ரஹ்) பள்ளியில் படித்தார். பள்ளியில் படிக்கும் போதில் இருந்து படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த இவர் தனது கல்லூரி படிப்பை திருச்சி MIET கல்லூரியில் பயின்று 2016ம் ஆண்டு பட்டம் பெற்றார். அதை தொடர்ந்து சென்னை ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் தனது முதுகலைப்படிப்பை நிறைவு செய்து அதில் பதக்கமும் பெற்றிருக்கிறார்.
இவருடைய வெற்றி தொடர அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!