கடந்த 04.08.2012 சனிக்கிழமை மாலை ஜித்தா சரஃபிய்யா லக்கி தர்பார் உணவகத்தில் அய்டாவின் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஜித்தாவாழ் அதிரை சகோதரர்கள் குடும்பத்துடன் திரளாக கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஊரிலிருந்து "புனித உம்ரா" வை நிறைவேற்ற வ்ந்திருக்கும் மவுலானா ஹாரூன் ஆலிம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஜித்தாவாழ் அதிரை சகோதரர்கள் குடும்பத்துடன் திரளாக கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஊரிலிருந்து "புனித உம்ரா" வை நிறைவேற்ற வ்ந்திருக்கும் மவுலானா ஹாரூன் ஆலிம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
நிகழ்ச்சியின் நிகழ்வாக:
அய்டாவின் தலைவர். சகோ.சம்சுதீன் தலைமை தாங்கினார். அய்டாவின் மூத்த ஆலோசகர்சகோ. ரஃபியா முன்னிலை வகித்தார். சிறுவன் அப்துல் ஃபாசித் கிராஅத் ஓதினார்.
அய்டாவின் ஆலோசனைக்குழு உறுப்பினர் சகோ. ஜஃபருல்லாஹ் நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வரவேற்று பேசினார். செயலாளர் சகோ.தாஜுதீன் அய்டாவின் கடந்த வருட செயல்பாடுகள் குறித்து விளக்கினார்
அவற்றுள்:
அய்டாவின் தலைவர் சகோ. சம்சுதீன் பேசும்போது. அய்டாவின் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கினார். சகோ.ரஃபியா அவர்கள் பேசும்போது நமதூர் மாணவர்கள் தொழில் கல்வியில் ஆர்வம் செலுத்த வேண்டும் என்று விளக்கினார்.

உடல் நலம் இல்லையென்றாலும் மவுலானா. ஹாரூன் ஆலிம் அவர்கள் நமதூர் மக்களை பார்த்தவுடன் ஆர்வத்தில் தற்போதைய சூழல் குறித்து மார்க்க அடிப்படையில் சிறப்புரை ஆற்றினார்.
வரவேற்பு மற்றும் வசூல் பொறுப்புகளை அய்டாவின் துணை தலைவர் சகோ. அஹமது அலி, மற்றும் அய்டாவின் துணை பொருளாளர்கள் சகோ. நிஜாம், சகோ இப்ராஹீம், மற்றும் ஆலோசனைக்குழு உறுப்பினர் சகோ. ஜெய்லானி ஆகியோர் ஏற்று நிறைவேற்றினார்கள்.
தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப வேலைகளை துணைச் செயலாளர் சகோ. மீராசா ரஃபியா சிறப்பாக செய்தார்.
குறிப்பு: நோன்பு திறக்கும் நேரத்தில் உலக முஸ்லிம்களுக்காக குறிப்பாக பர்மா...சிரியா...பாலஸ்தீன்....அஸ்ஸாம் முஸ்லிம்களின் பாதுகாப்பிற்க்காக துஆ கேட்கப் பட்டது.
அய்டாவின் தலைவர். சகோ.சம்சுதீன் தலைமை தாங்கினார். அய்டாவின் மூத்த ஆலோசகர்சகோ. ரஃபியா முன்னிலை வகித்தார். சிறுவன் அப்துல் ஃபாசித் கிராஅத் ஓதினார்.
அய்டாவின் ஆலோசனைக்குழு உறுப்பினர் சகோ. ஜஃபருல்லாஹ் நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வரவேற்று பேசினார். செயலாளர் சகோ.தாஜுதீன் அய்டாவின் கடந்த வருட செயல்பாடுகள் குறித்து விளக்கினார்
அவற்றுள்:
- மாதந்தோறும் இரண்டாவது வெள்ளிக் கிழமையில் கூட்டம் நடத்தப்படுகிறது.
- வழக்கம்போல் சென்ற வருடமும் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப் பட்டது. அதே நிகழ்ச்சியில் ஃபித்ரா வசூல் செய்து அதிரை பைத்துல்மால் மூலம் ஊரில் ஃபித்ரா விநியோகம் செய்தது.
- கீழத்தெருவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் நஷ்டம் அடந்தவர்களுக்கு உதவும் வகையில் அவசர உதவியாக ரூபாய் 10,000 (அய்டா நிதியிலிருந்து) உடன் வழங்கப் பட்டது.
- சென்ற ஜனவரி மாதம் வழக்கம்போல் முறையாக தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
- கஃபீல் பிரச்சனை மற்றும் இக்காமா கிடைக்காமல் அவதியுற்ற நம் சகோதரர்களுக்கு உதவும் வகையில் நஜ்ரான் சென்று கபீல் மற்றும் ஏஜெண்டுகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது, இதனால் ஒரு சிலர் பயன்பெற்றனர்.
- அதிரை எக்ஸ்பிரஸ் இணையதள மீடியா நடத்திய கல்வி விருது 2012 ல் +2, SSLC, மற்றும் குர்ஆன் மதரஸா ஆகிவற்றுக்கு நடந்த தேர்வில் வெற்றி பெற்று இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு அய்டாவின் சார்பாக பரிசு வழங்கப்பட்டது.
- அதிரை பைத்துல்மால் தலைவராக பேராசிரியர் எஸ். பரக்கத் அவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஆதரவளித்ததோடு, அதிரை பைத்துல்மால் சேவைகளுக்கு அய்டா தொடர்ந்து முழு ஆதரவு அளிப்பது என முடிவெடுக்கப்பட்டது.
- மேட்டுத்தெரு ரஹ்மானியாப் பள்ளியை அகலப் படுத்துவதற்க்காக நிலம் மற்றும் கட்டிட உதவிக்காக வந்த வேண்டுகோளை ஏற்று ரூபாய் 50,000ஐ இலக்காக வைத்து வசூல் செய்ததில், அதற்கு அதிகமாக அல்லாஹ்வின் உதவியால் சுமார் 75,532 ரூபாய் வசூல் செய்து அப்பள்ளி கமிட்டியிடம் அனுப்பிவைக்கப்பட்டது.
- பிலால் நகர் ஹஜ்ரத் பிலால் (ரழி) பள்ளிவாசலுக்கு இந்த வருடம் கஞ்சி மற்றும் நோன்பு திறப்பு ஏற்பாட்டிற்கு ஒருநாளைக்கான செலவு அய்டா பொறுப்பேற்று அதற்கான தொகை ரூபாய் 6100 வழங்கப்பட்டது.
- நமதூர் மக்தூம் பள்ளி பழுதடைந்துள்ளதை சீர் செய்வதற்க்காகவும் இன்னும் பல மராமத்து வேலைகளுக்காகவும் பொருளாதார உதவி வேண்டி வந்த வேண்டுகோளை ஏற்று ரூபாய் 50000 வசூல் செய்து கொடுக்க கடந்த மாத கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
- ஜித்தாவில் உள்ள அதிரை சகோதரர்களுக்கு அவசர கடனுதவிகள் வழங்கப் பட்டது.
அய்டாவின் தலைவர் சகோ. சம்சுதீன் பேசும்போது. அய்டாவின் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கினார். சகோ.ரஃபியா அவர்கள் பேசும்போது நமதூர் மாணவர்கள் தொழில் கல்வியில் ஆர்வம் செலுத்த வேண்டும் என்று விளக்கினார்.

உடல் நலம் இல்லையென்றாலும் மவுலானா. ஹாரூன் ஆலிம் அவர்கள் நமதூர் மக்களை பார்த்தவுடன் ஆர்வத்தில் தற்போதைய சூழல் குறித்து மார்க்க அடிப்படையில் சிறப்புரை ஆற்றினார்.
வரவேற்பு மற்றும் வசூல் பொறுப்புகளை அய்டாவின் துணை தலைவர் சகோ. அஹமது அலி, மற்றும் அய்டாவின் துணை பொருளாளர்கள் சகோ. நிஜாம், சகோ இப்ராஹீம், மற்றும் ஆலோசனைக்குழு உறுப்பினர் சகோ. ஜெய்லானி ஆகியோர் ஏற்று நிறைவேற்றினார்கள்.
தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப வேலைகளை துணைச் செயலாளர் சகோ. மீராசா ரஃபியா சிறப்பாக செய்தார்.
குறிப்பு: நோன்பு திறக்கும் நேரத்தில் உலக முஸ்லிம்களுக்காக குறிப்பாக பர்மா...சிரியா...பாலஸ்தீன்....அஸ்ஸாம் முஸ்லிம்களின் பாதுகாப்பிற்க்காக துஆ கேட்கப் பட்டது.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!