2 இணைப்பு இருந்தால் சிலிண்டர் வழங்கப்பட மாட்டாது! மத்திய அரசு திடீர் எச்சரிக்கை!!



புதுடெல்லி: ஒன்றுக்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு இணைப்புகளை வைத்திருப்பவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் பனபாக லட்சுமி இதனையை தெரிவித்துள்ளார்.
 வாடிக்கையாளர்கள் தங்களது விவரத்தை பற்றியான படிவத்தை வழங்குவதற்கான காலக் கேடு இந்த மாதம் 31ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். குறிப்பிட்ட அந்த தேதிக்குள் படிவத்தை அளிக்க தவறினால் மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட மாட்டாது என்றும், வர்த்தக ரீதியில் வழங்கப்படும் சிலிண்டர்களை கூடுதல் விலை கொடுத்து வாங்க நேரிடும் என்றும் பனபாக லட்சுமி கூறியுள்ளார். ஒரு வீட்டிக்கு சமையல் எரிவாயு இணைப்பு என்பதை அமல்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

கூடுதல் இணைப்பு வைத்திருப்பவர்கள் தாமாகவே முன் வந்து ரத்து செய்ய வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. நாடு முழுவதும் 2 கோடிக்கு மேற்பட்டவர்கள் ஒரு முகவரியில் வேறு பெயர்களில் கூடுதல் சமையல் எரிவாயு இணைப்புகளை வைத்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.



0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!