2013 - ஹஜ் பயணம் செல்ல 1 லட்சத்து 70 ஆயிரம் இந்தியர்களுக்கு சவுதி அரேபியா அனுமதி!

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் புனிதக் கடமைகளில் இறுதிக்கடமையான ஹஜ் புனித யாத்திரைக்காக உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்கள் மக்காவில் ஆண்டுதோறும் ஒன்றுகூடி, ஆதி இறை இல்லமான 'கஃபா'வை வலம் வந்து இறைவனை பிராத்திப்பார்கள்.


வாழ்நாளில் ஒருமுறையாவது ஹஜ் யாத்திரையை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே ஒவ்வொரு இஸ்லாமியரின் உயரிய லட்சியம். 'ஹாஜி' என்ற பட்டத்துடன் தாயகம் திரும்பும்போது, ஒருவர் செய்த சகல பிழைகளும், பாவங்களும் மன்னிக்கப்பட்டு, அன்று பிறந்த குழந்தையைப் போன்ற தூய்மையான உள்ளத்துடன் இறைப்பணிக்காக அவர் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு புதிய வாழ்க்கையை துவங்குகிறார்.

அவ்வகையில், இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களை ஹஜ் யாத்திரைக்கு அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளை மத்திய அரசு ஆண்டு தோறும் செய்து வருகிறது. இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் செல்ல விரும்புவோரின் விண்ணப்பங்கள் ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே வருவதால், வழக்கமான அனுமதியைவிட, இந்த ஆண்டு 10 ஆயிரம் பேருக்கான அதிக ஒதுக்கீட்டை வழங்குமாறு இந்திய அரசு சவுதி அரேபியா அரசிடம் கோரிக்கை வைத்தது.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் இந்த ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற சவுதி அரசு அனுமதி அளித்துள்ளது.

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்...  

1 comments:

Anonymous said...

If you ωould liκe to get a grеat deal from this post then you have to aрply these methods to your won weblog.


My web-site: netherlands travel guide

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!