துபாய் : ஐரோப்பாவில் உள்ளதை போன்று அனைத்து வளைகுடா நாடுகளுக்கும் ஒரே விசாவை கொண்டு வரும் ஏற்பாடுகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவூதியிலிருந்து வெளியாகும் அரப் நியூஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தை போல் அனைத்து வளைகுடா நாடுகளுக்கும் பொதுவான விசா ஒன்றை கொண்டு வருவதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தைகள் அதிகாரிகள் மட்டத்தில் நடப்பதாக தெரிகிறது.
தற்போது சவூதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் தாங்கள் பணிபுரியும் நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு செல்ல வேண்டுமாயின் தனி விசா பெற்றே செல்ல வேண்டும். இச்சூழலில் பொதுவான விசா கொண்டு வருவது வளைகுடாவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும்.
வளைகுடாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 31 சதவிகிதத்தினர் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவான விசா அமல்படுத்தப்பட்டால் வர்த்தகம் வளர்ச்சியுறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ஏதேனும் ஒரு நாட்டில் வெளிநாட்டவர் யாருக்கேனும் தடை விதிக்கப்பட்டால் ஒட்டு மொத்த வளைகுடா நாடுகளிலும் அது எதிரொலிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி- இந்நேரம்.காம்
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!