அமீரகம் துபாயில் நடைபெற்ற கீழத்தெரு மஹல்லாவின் மாதாந்திரக் கூட்டம்.!

அமீரக துபையில் கீழத்தெரு மஹல்லாவின் மாதாந்திரக்கூட்டம் 14/11/2014 வெள்ளிக்கிழமை இஷாஹ் தொழுகைக்கு பின் அப்பாஸ் ரூம் மாடி மேல்தளத்தின் வளாகத்தில் அமீரக துபை கீழத்தெரு மஹல்லா தலைவர் ஜனாப் M.அப்துல் ஜலீல் அவர்கள் தலைமை ஏற்க சிறப்புடன் ஆரம்பமானது.   


இக்கூட்டத்தில் நல்ல பல தீர்மானங்களும் பல செய்திகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. கீழத்தெரு மஹல்லா முன்னேற்றத்திற்கான பயனுள்ள செய்திகள் கலந்துரையாடப்பட்டன. கீழத்தெரு மஹல்லா வாசிகளின் பல கோரிக்கைகளும் கேட்டு அறியப்பட்டன.


கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய தீர்மானங்கள்  


1,மழைகாலங்களில் பிலால்நகர் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதால் அதற்க்கு சரியான வடிகால் அமைத்து அந்தத் தண்ணீரை நமது கீழத் தெரு மஹல்லா விற்கு உட்பட்ட செய்னான் குளத்திற்கு கொண்டு வந்து நிரப்புவது  குறித்து பேசப்பட்டன.


2, செடியங் குளத்திற்கு தண்ணீர் கொண்டுவர பாடுபடும் கீழத்தெரு, மேலத்தெரு மஹல்லாவைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மேலும்  வேண்டிய  உதவிகள் செய்ய கீழத் தெரு மஹல்லா தலைமை நிர்வாகிகளுக்கு அறியப்படுத்துவது குறித்து பேசப்பட்டன.


3,இன்ஷா அல்லாஹ் வரும் வருடம் முதல்  நோன்பில் விநியோகிக்கப்படும் ஃபித்ரா தொகையை அதிகப்படுத்தி கொடுப்பது பற்றி பேசப் பட்டன.


4,நமதூர் ஜாவியாவில் கட்டிவரும் கல்யாண  மண்டபம் வேலை  பூர்த்தியாவதற்கு கீழத்தெரு மஹல்லா சார்பாகவும் உதவி செய்வது குறித்தும்  பேசப்பட்டது






    



இன்னும் பல விசயங்கள் கலந்துரையாடலுக்குப்பின் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அமீரக கீழத்தெரு மஹல்லா தலைவர் நன்றி கூற, கூட்டம் இனிதாய் முடிவுற்றன.

இப்படிக்கு,
அமீரக கீழத்தெரு முஹல்லா நிர்வாகிகள்


செய்தித் தொகுப்பு & புகைப் படங்கள்
அதிரை.மெய்சா [ அதிரை நியூஸ் ]

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!