குவைத்தில் வெளிநாட்டு நபர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் வைத்திருக்க தடை விரைவில் வரும் என்று தெரிகிறது.இதற்கா ஆய்வு அறிக்கை குவைத் அரசுக்கு ஆய்வு குழு சமர்ப்பித்துள்ளது என்று அரபு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி ஆய்வு குழு குவைத்தில் நடத்திய ஆய்வில் குவைத் சாலைகள் 12 லட்சம் வாகனங்கள் மட்டுமே உள்கொள்ளும் நிலையில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
ஆனால் குவைத் சாலைகளில் தினமும் 19 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் வலம் வருகிறது என்று அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
இதனால்தான் போக்குவரத்து நெரிசல் ஏற்பட காரணமாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே வெளிநாட்டு நபர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களை பதிவு செய்வதை தடைவிதிக்க வேண்டும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
குவைத்தில் இதற்கு முன்னர் 10 வருடங்களுக்கு வழங்கப்பட ஓட்டுநர் உரிமம் தற்போது விசா காலாவதி அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது அதுவும் அரசால் வரையறை செய்யப்பட குறிப்பிட்ட துறையில் வேலை செய்யும் நபர்களுக்கு மட்டுமே என்று கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் குவைத்தின் சில முக்கிய சாலைகளை பயன்படுத்தி Toll(கட்டணம்) வசூலிக்கவும் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது என்று தெரிகிறது.

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!