பஹ்ரைன் நாட்டில் வாழும் இந்தியாவை சேர்ந்த சமூக சேவகர்களுக்கு அந்நாட்டின் சட்ட திட்டங்கள் தொடர்பான பயிற்சியை வழங்க பஹ்ரைன் வழக்கறிஞர்கள் முன்வந்துள்ளனர்.
பஹ்ரைன் நாட்டில் உடல் உழைப்பை மட்டும் நம்பி 4 லட்சத்து 20 ஆயிரம் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு சிக்கல் நேரும்போது இந்தியாவை சேர்ந்த சமூக சேவகர்கள் உதவி செய்து வருகின்றனர்.
பஹ்ரைன் நாட்டின் சட்டதிட்டங்களை முழுமையாக இவர்கள் அறிந்துக்கொள்ளும் போதுதான் மற்றவர்களுக்கு சரியான முறையில் அறிவுரை வழங்க முடியும் என பஹ்ரைனுக்கான இந்திய தூதர் கருதினார்.
இதனையடுத்து, பஹ்ரைனில் வாழும் இந்தியர்களுக்கு சமூகச் சேவை செய்ய முன்வருபவர்களுக்கு அந்நாட்டின் சட்டதிட்டங்கள் தொடர்பாக இந்திய தூதரகத்தில் பயிற்சி அளிக்கப்படும்.பஹ்ரைன் நாட்டு வழக்கறிஞர்களுடன் இந்திய தூதரகத்தை சேர்ந்த வழக்கறிஞர்களும் இந்த பயிற்சியை அளிக்க உள்ளனர்.
சிக்கலில் மாட்டிக்கொள்ளும் இந்தியர்களுக்கு சரியான அறிவுரை வழங்குவதற்கு வசதியாக இந்த பயிற்சி முகாமில் இந்தியாவை சேர்ந்த சமூக சேவகர்கள் பங்கேற்று பயனடைய வேண்டும் என பஹ்ரைனுக்கான இந்திய தூதர் மோகன் குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

2 comments:
பதிவுக்கு நன்றி
பதிவுக்கு நன்றி
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!