துபாய் : உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா உள்ளிட்ட மிகப் பெரும் கட்டிடங்களை கொண்டுள்ள துபாயில் தற்போது உலகின் மிக உயரமான பின்னல் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.
உலகின் மிக உயரமான கட்டிடமான பர்ஜ் கலிபா, உலகின் மிகப் பெரும் குடியிருப்பு கட்டிடம் , உலகின் மிகப் பெரும் ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் துபாயில் உள்ளது அறிந்ததே. அவ்வரிசையில் தற்போது உலகின் உயரமான பின்னல் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.
துபாயில் உள்ள துபாய் மெரினா எனும் பகுதியில் 272 மில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டுள்ள கயான் கோபுரம் கீழிலிருந்து மேல் வரை 90 டிகிரி கோணத்தில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 75 மாடிகள் கொண்ட கேனல் கோபுரம் 1017 அடி உயரம் கொண்டதாகும்.
2006ல் தொடங்கப்பட்ட இக்கோபுரம் தொழில்நுட்ப காரணங்களால் இடை நிறுத்தப்பட்டு பின் 2009ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் நிறுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும். தற்போது இக்கோபுரத்தின் 80 சதவிகித குடியிருப்புகள் ஏற்கனவே விற்று விட்டதாக இக்கோபுரத்தை நிர்வகிக்கும் கயன் ரியல் எஸ்டேட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!