அதிரை பேரூராட்சியின் சார்பாக 2012-2013 ஆம் ஆண்டுக்கான நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ், கீழத்தெரு மஹல்லாவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள செய்னாங் குளம் – தடுப்பு சுவர் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக ரூபாய் 50 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு, இந்த பணிகளுக்கான ஒப்பந்தமும் இறுதி செய்யப்பட்டும் கடந்த சில மாதங்களாக இதற்குரிய பணிகள் துவங்குவதற்குரிய எவ்வித முகாந்திரமும் தென்படாமலும், மேலும் இக்குளத்தில் கலக்கின்ற அசுத்தங்களாலும், குப்பைக்கழிவுகளாலும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு இந்தக்குளத்தை சுற்றி வசிக்கக்கூடிய பொதுமக்களுக்கு வைரஸ் தொற்று கிருமிகளால் நோய்கள் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளதால், விரைவாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த இந்தப்பகுதி மக்களுக்கு சற்று ஆறுதலடைவது போல் உள்ளது செய்னாங் குளத்தின் புனரமைப்பு பணிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
இதற்காக இக்குளத்திலிருந்து அசுத்த நீர் வெளியேற்றப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் அக்குளத்தைச் சுற்றி தடுப்பு சுவர் அமைப்பதற்காக JCP இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வருகின்றன.
இதற்காக இக்குளத்திலிருந்து அசுத்த நீர் வெளியேற்றப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் அக்குளத்தைச் சுற்றி தடுப்பு சுவர் அமைப்பதற்காக JCP இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வருகின்றன.
நன்றி : அதிரை நியூஸ்
6 comments:
நீண்ட காலத்திற்குப்பிறகு இக்குளத்திற்கு விடிவுகாலம் பிறந்துள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தியே.!
இக்குளத்தின் புரனமைப்புப் பணிகளுக்கு முயற்சித்த அனைவர்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.
இனிமேல் இக்குளத்தை அசுத்தப்படுத்தாமல் கழிவுநீர் குப்பை கூளங்களை கொட்டாமல் பாதுகாப்பது பொது மக்களின் கடமையாகும்.
மகிழ்ச்சியான செய்தி இவ்விசயதிர்க்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி.
இனிமேல் இக்குளத்தை அசுத்தப்படுத்தாமல் கழிவுநீர் குப்பை கூளங்களை கொட்டாமல் பாதுகாப்பது பொது மக்களின் கடமையாகும்.
மகிழ்ச்சியான செய்தி இவ்விசயதிர்க்கு பாடுபட்ட சேர்மன் அஸ்லாம், வார்டு உறுப்பினர் அனைவருக்கும் நன்றி.
மகிழ்ச்சியான செய்தி இவ்விசயதிர்க்கு பாடுபட்ட சேர்மன் அஸ்லாம், வார்டு உறுப்பினர் அனைவருக்கும் நன்றி
நமதூரில் பல ஆட்சி காலத்திற்குப்பிறகு பல திட்டங்கள் செயல்பட்டுவருகிறது மகிழ்ச்சிக்குரிய செய்தியே.! S.H அஸ்லம் அவர்களின் துடிப்பான மக்கள் சேவைக்கும் அவர்களுடன் இணைந்து பணியாற்றும் மற்ற உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த
நன்றியுடன் வாழ்த்துக்களும்.
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!