வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்!!!


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும்
நாளை மறுதினம் 22-10-2017 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அறிவித்துள்ளார்.


இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியவாறு, 03-10-2017 அன்று தஞ்சாவூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட. நீக்கம் செய்யப்படவேண்டிய மற்றும் திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் 03-10-2017 முதல் 31-10-2017 வரை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 2175 வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் 22-10-2017 (ஞாயிற்றுக்கிழமை) அன்று  நடைபெறவுள்ளது.  சிறப்பு முகாம் தினத்தன்று அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குச் சாவடி  நிலை அலுவலர்கள் தேவையான தேர்தல் படிவங்களுடன் (படிவம் எண் 6, 7, 8, 8ஏ ஆகியன) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பணியில் இருப்பார்கள்.

தஞ்சாவூர் மாவட்ட பொதுமக்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத, 01-01-2018 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் அதாவது 31-12-1999 வரை பிறந்தவர்கள் அனைவரும் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட தொடர்புடைய வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று உரிய படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து அவர்களிடமே அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறhர்கள்,  நீக்கம் செய்ய அல்லது திருத்தம் மேற்கொள்ள உரிய படிவங்களை தொடர்புடைய வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் பெற்று, பூர்த்தி செய்து அவர்களிடமே அளிக்கலாம்.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் நகல் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும்,  பொது மக்கள் அதனைப் பார்வையிட்டு. தங்கள் பெயர் பிழையேதுமின்றி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை  உறுதி செய்துகொள்ள வேண்டும்,  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ,அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!