நமதூர் காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நீண்ட காலம் ஆசிரியராகப் பணியாற்றி பின்னர் உதவித் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு வகித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் முன்னாள் உதவித் தலைமை ஆசிரியர் ஹாஜி M. முகம்மது அலியார் அவர்கள் கடந்த சில வாரங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார்கள். ஆகவே அவர்கள் பூரண குணம் அடைந்து நற்சுகம் பெற்றிருக்க இப்புனித மிக்க ரமலான் மாதத்தில் நாம் அனைவரும் தற்தமது ஹக்கில் துவா செய்வோம்.
[ இப்புனித மிக்க ரமலான் மாதத்தில் மூமினுக்கு மூமின் மனமுவந்து கேட்கப்படும் துவாவை அல்லாஹ் உடனே அங்கீகரிக்கிறான் ]
தகவல் : M. அப்துல் ஜலீல்
அமீரக கீழத்தெரு மஹல்லா தலைவர்
செய்தித்தொகுப்பு அதிரை மெய்சா
