துபையில் நடந்த அமீரக கீழத்தெரு மஹல்லா மாதாந்திரக்கூட்டம்.!










அமீரக துபையில் கீழத்தெரு மஹல்லாவின் மாதாந்திரக்கூட்டம் நேற்று முன் தினம் 29/03/2013 வெள்ளிக்கிழமை அன்று    இஷா தொழுகைக்கு பின் நடைபெற்றது.  கீழத்தெரு மஹல்லா தலைவர் ஜனாப் M.அப்துல் ஜலீல் அவர்கள் தலைமை ஏற்க சகோதரர் மீரான் ஹசனி  கஹ்ராத் ஓத சிறப்புடன் ஆரம்பமானது.

நமது ஊர்,மற்றும் நமது மஹல்லா வாசிகள் நலன் கருதி நல்ல பல விசயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அதில் சில முக்கிய கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டன.
 

கூட்டத்தில் முன்வைத்து பேசப்பட்ட கோரிக்கைகளில்  முக்கியமானவைகள்.!

1,காட்டுப்பள்ளி அருகில் பெண்களுக்கென தனி சுகாதார வாளகம் [கழிப்பிடம்] கட்டியதை திறப்பதற்கான   முயற்ச்சி எடுப்பது பற்றி பேசப்பட்டன.

2,நமது தெருவாசிகளின் நலன் கருதி நமது தெருவுக்கென்று நுகர்பொருள் விநியோகத்திற்கான ரேசன் கடை அமைக்க தகுதியான இடம் விரைவில் பார்த்து அமைக்கப்படும். 

3,பெண்களுக்கென மார்க்க அறிவுரை சொற்ப்பொழிவுகள்  நடத்த வசதியுடன் கூடியபொருத்தமான இடத்தை தேர்ந்தெடுத்து விரைவில் செயல்படுத்துவது பற்றி பேசப்பட்டன.


4, மிக முக்கியமாக கீழத்தெரு மஹல்லா வாசிகள் நமது தெரு மாத சந்தாவை சரியாக கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டன. இன்னும் பல நல்ல திட்டங்களை நமது சார்பாக ஊருக்காகவும், நமது தெருக்காகவும் செய்து கொடுக்கலாம். அதில் அல்லாஹ் பரக்கத்தை வைத்திருக்கிறான்.

மற்றபல விசயங்கள் கலந்துரையாடலுக்குப்பின் சகோதரர் மீரான் ஹசனி துவா ஓத கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அமீரக கீழத்தெரு மஹல்லா தலைவர் நன்றி கூற கூட்டம் இனிதாய் முடிவுற்றன.

இப்படிக்கு அன்புடன் : அமீரக கீழத்தெரு முஹல்லா நிர்வாகிகள்

செய்தித்தொகுப்பு : அதிரை.மெய்சா


  


3 comments:

ஹபீப் HB said...

பதிவுக்கு நன்றி இதில் கலந்துக்கொண்ட கீழத்தெரு மஹல்லா வாசிகள் அனைவர்க்கும் எனது வாழ்த்துக்கள்.

N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A said...

நல்ல திட்டங்களை நிறை வேற்ற எனது வாழ்த்துக்களும் துஆவும்

Unknown said...

நல்ல திட்டங்களை நிறை வேற்ற எனது வாழ்த்துக்களும் துஆவும்

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!